Wednesday, 21 March 2018

உயர் இரத்த அழுத்தம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான

உயர் இரத்த அழுத்தம் இருந்தும் அதை உணராத மக்களின் எண்ணிக்கை, கணிசமானது. ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கான நடவடிக்கைகளுக்குத் தேவைப்படுவது, உயர் இரத்த அழுத்தத்தின் பின்விளைவுகளை குறைப்பதும் மற்றும் உயர் இரத்த அழுத்த எதிர்ப்பிகள் மருந்து சிகிச்சைமுறையை இயன்ற அளவு குறைப்பதும் ஆகும். மருந்து சிகிச்சைமுறையை தொடங்குவதற்கு முன், குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகிறது உயர் இரத்த அழுத்தத்தை ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான 2002 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய உயர் இரத்த அழுத்த கல்வி திட்டத்தின் மூலம் கோடிட்டு காட்டிய வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாக இருக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களை தொடர்ந்து 2004 பிரிட்டிஷ் உயர் இரத்த அழுத்த அமைப்பின் முன்மொழியப்பட்ட வழிகாட்டல்கள் பின்வருவன:
  • இயல்பான உடல் எடையை பராமரித்தல் (எ.கா., உடல் நிறை குறியீட்டெண் 20–25;).  கிலோ/மீ 2).
  • உணவுத்திட்ட சோடியம் உட்கொள்ளுதலை நாளொன்றுக்கு 100 mmol-ஆக குறைத்தல் (நாளொன்றுக்கு <6 கிராம் சோடியம் குளோரைட் அல்லது <2.4 கிராம் சோடியம்).
  • சுறுசுறுப்பான நடைபயிற்சி போன்ற வழக்கமான உடல்ரீதியான ஏரோபிக் நடவடிக்கையில் ஈடுபடுதல் (வாரத்தில் பெரும்பாலான நாட்கள், நாளொன்றுக்கு ≥30 நிமிடம்).
  • ஆண்களுக்கு / நாளொன்றுக்கு 3 யூனிட்களுக்கு மேல் மற்றும் பெண்களுக்கு / நாளொன்றுக்கு 2 யூனிட்ககளுக்கு மேல் மது அருந்துவதை கட்டுப்படுத்துதல்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஒரு உணவுக்கட்டுப்பாட்டை உட்கொள்ளுதல் (எ.கா., நாளொன்றுக்கு குறைந்தது ஐந்து பகுதிகள்).
ஆற்றல் வாய்ந்த வாழ்க்கைமுறை மாற்றியமைத்தல்கள் ஒரு தனிப்பட்ட உயர் இரத்த அழுத்த எதிர்ப்பிகள் மருந்தைப் போல் அதே அளவுக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாழ்க்கைமுறை மாற்றியமைத்தலின் கூட்டிணைப்பால் இன்னும் நல்ல முடிவுகளை அடைய முடியும்.

பேரிச்சை சத்துக்கள்


Image result for dates image

பேரிச்சை சத்துக்கள் தேவையான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும். முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.



Saturday, 17 March 2018

தலைவலி போக்க எளிய வழி முறைகள்

உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்து பாடாய் படுத்தி எடுக்கிறதா. தாங்க முடியாத வலியால் துளைத்து எடுக்கிறதா.
இதற்கு ஒரு சிறந்த மருந்து உங்கள் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றினாலே இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் ஒற்றைத் தலைவலிக்கு என்ன தான் மாத்திரைகள் எடுத்தாலும் இதற்கான பலன் கிடைப்பதில்லை.
.இந்த ஒற்றைத் தலைவலி உங்கள் தலையின் ஒரு பகுதியில் மட்டும் வலியை ஏற்படுத்தி துடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இது ஒரு நாளைக்கு 4 லிருந்து 72 மணி நேரம் வரை கூட நீடிக்கலாம்
இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்குமே வித்தியாசம் அடைந்து காணப்படுகிறது. 75% மக்களுக்கு ஒற்றைத் தலைவலி வர பரம்பரையும் காரணமாக உள்ளது.
எனவே இந்த ஒற்றைத் தலைவலிக்கு பக்க விளைவுகளை உண்டு பண்ணும் மாத்திரைகளை சாப்பிடுவதை விட
இயற்கையான பொருட்களை கொண்டே இதை சரி செய்து விடலாம்.
சரி வாங்க எந்த எந்த இயற்கை பொருட்கள் எப்படி இந்த ஒற்றைத் தலைவலியை போக்குகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
புதினா டீ :
தினமும் புதினா டீ பருகுவதால் இந்த ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தலாம். இநது நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்து ஒற்றைத் தலைவலியை நன்றாக குறைத்து நல்ல பலனை கொடுக்கும்.
சிவப்பு மிளகாய்;
சிவப்பு மிளகாயில் கேப்சைசின் என்ற பொருள் உள்ளது. இந்த பொருள் ஒற்றைத் தலைவலியை சரி செய்கிறது. இந்த பொருள் நமது உடலில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர் மூலமாக வலியை குறைப்பதற்கான சிக்னலை அனுப்புகிறது.
இஞ்சி;
இஞ்சி கண்டிப்பாக ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துகிறது. ஒற்றைத் தலையில் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் தென்படும். ஏனெனில் இந்த ஒற்றைத் தலைவலி நம் வயிற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒற்றைத் தலைவலிக்கு ஒரு மிகச்சிறந்த வீட்டு முறையாகும்.
ஐஸ் பேக்;
ஐஸ் பேக்கை வைத்து தலையில் ஒத்தடம் கொடுப்பதால் சூடான வலிக்கு குளிரான ஒத்தடம் ஒரு மர மரப்பான தன்மையை அந்த இடத்தில் ஏற்படுத்தி வலியின் வீரியத்தை குறைக்கிறது. இந்த ஒத்தடம் உங்கள் தசைகளையும் ரிலாக்ஸ் ஆக்குகிறது.
காஃபைன்;
ஒற்றைத் தலைவலி இருக்கும் போது ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ற முறையில் காஃபைன் எடுத்தால் அதன் வலி குறைந்து விடும்.
மக்னீசியம் உணவுகள்;
மக்னீசிய சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுக்கும் போது ஒற்றைத் தலைவலி குணமாகிறது. இந்த முறை பெண்களின் மாதவிடாய் வலிகளையும் சரி செய்கிறது.
மக்னீசியம் அடங்கியுள்ள உணவுகளாவன கீரைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, சூரிய காந்தி இலைகள், வெள்ளை சோளம், ப்ரவுன் அரிசி, முழு தானியங்கள் ஆகியவை ஆகும்.
இருட்டு அறையில் அமர்தல்;
வெளிச்ச கூச்சத்தினால் அல்லது போட்டோ போஃபியா போன்றவற்றாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. எனவே அதற்கு எதிர் பதமாக ஒரு இருட்டு அறையில் ஓய்வு எடுத்தால் கொஞ்சம் ரிலீவ் உண்டாகும்.
விட்டமின் பி2 அடங்கிய உணவுகள்;
நீங்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் ரிபோப்ளவின் (விட்டமின் பி2) எடுத்து கொள்ள வேண்டும். இதை 3 மாதங்கள் பின்பற்றினால்
நல்ல மாற்றத்தை காணலாம்.
நல்ல தூக்கம் ஒற்றைத் தலைவலி மேலும் நமது தூக்கத்தையும் கெடுத்து விடுகிறது. எனவே நன்றாக தூங்கினாலே போதும் ஒற்றைத் தலைவலியை துரத்தி விடலாம்.
தலை மற்றும் கழுத்து பகுதி மசாஜ்;
அப்படியே உங்கள் தலை மற்றும் கழுத்து பகுதியை மசாஜ் செய்தால் போதும். அதனுடன் கொஞ்சம் ஐஸ் பேக் ஒத்தடம் கொடுத்தால் நல்ல ரிலீவ் தசைகளில் உண்டாகும்.
பட்டர்பர் மூலிகை;
ஒற்றைத் தலைவலிக்கு பட்டர்பர் மூலிகை ரெம்ப காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள் ஒற்றைத் தலைவலியை சீக்கிரமாக குணமாக்ி விடுகின்றனர்.
பீவர்வ்யூ மூலிகை;
இந்த மூலிகை ஒற்றைத் தலைவலி வருவதை தடுக்கிறது. நிறைய மக்கள் இந்த மூலிகையை பயன்படுத்தி ஒற்றைத் தலைவலி குணமாகி உள்ளதாக கூறுகின்றனர்.
குளூட்டன் ப்ரீ டயட் (கோதுமை இல்லாத உணவுப் பழக்கம்;
சில ஆராய்ச்சிகளின் முடிவு குளூட்டன் ப்ரீ டயட் மேற்கொண்டால் ஒற்றைத் தலைவலி குறைகிறது என்று கூறுகின்றனர்.
லாவண்டர் எண்ணெய்;
லாவண்டர் எண்ணெய்யை நெற்றியின் இரு பக்கங்களிலும் மற்றும் கழுத்தின் பின் பகுதியிலும் தேய்த்து மசாஜ் செய்தால் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தலாம்.
நீர்ச்சத்து போதுமான;
நீர்ச்சத்து உடலில் இல்லாமல் இருந்தால் ஒற்றைத் தலைவலி ஏற்படும். எனவே நிறைய தண்ணீர் குடித்தால் உடலின் மெட்டா பாலிசம் அதிகரித்து ஒற்றைத் தலைவலி சரியாகும்.
நச்சுக்களை வெளியேற்றும் குளியல்;
ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த நச்சுக்களை வெளியேற்றும் குளியலை மேற்கொள்ளவது நல்லது. இந்த குளியலை நிறைய வழிகளில் செய்யலாம். சூடான நீருடன் ஆப்பிள் சிடார் வினிகர் கலந்து குளிக்கலாம். மேலும் நமக்கு தேவையான எண்ணெய்களையும் கலந்து கொள்ளலாம்.
அக்குபஞ்சர்;
ஒற்றைத் தலைவலிக்கு அக்குபஞ்சர் முறை நல்ல தீர்வை அளிக்கிறது. இது உடனடியாக வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
யோகா;
யோகா ஒரு பக்க விளைவுகள் இல்லாத முறையாகும். சில யோகா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி சரியாகும்.
உடற்பயிற்சி;
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் ஒற்றைத் தலைவியின் வீரியம் குறைகிறது. உடற்பயிற்சி செய்யும் போது நமது உடல் எண்டோர்பின்ஸ்யை உருவாக்குவதால் இது ஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்பட்டு வலியை குறைக்கிறது.
ஆதாரம் – ஒன்இந்திய நாளிதழ்

உடல் சுட்டை குறைக்க வீட்டு வைத்தியம்.

*மாதுளம் பழத்தோலைக் காய வைத்துப் பொடி செய்து… ஒரு டேபிள்ஸ்பூன் பொடிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைத்து குடித்தாலும் சூடு தணியும். சூடு உடம்புக்காரர்கள், அடிக்கடி இளநீர் குடிக்கலாம்.
* மோரில் எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்து அதில் சிறிது ராக் சால்ட் (கடைகளில் கிடைக்கும்) கலந்து வெயில் காலங்களில் குடித்து வர உடல் சூடு தணியும். இது பித்தத்தையும் தணிக்கும்.

கொத்தமல்லி பயன்கள்.

கொத்தமல்லி:  
இதை தினமும்உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல மருந்து ஆகும். பசியை தூண்டும், பித்தம்  குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

உடல் எடையை.குறைக்க எளிய வழி

கேக்,கொழுப்பு நிறைந்த மாமிசம்,பால்,கிரீம்,சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு,மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.

உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி,உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.

நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன்றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.

குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.

உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால்,அது உடல் பலவீனத்தையும்,நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.

சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்லிம் ஆகுங்கள்!

உயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்

உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை, என்ற பெருவாரியாகப் பரவும் நோய், இன்றைய உலகில் வேகமாக பரவி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் இன்றைய வாழ்க்கை முறையின் அங்கமாக திகழும் துரித உணவு, சோடா, மன அழுத்தம் இந்திய மக்களையும் கவ்வ ஆரம்பித்து விட்டது. இதன் விளைவு, மூன்றில் ஒரு இந்தியன் கூடுதல் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்கிறது கணக்கு. இந்த நோயினால் இதய நோய்கள், வாத நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் கூட தாக்க வாய்ப்புள்ளது.

இந்த நோய் குணமாக மருத்துவ துறையின் மேல் மட்டுமே நம்பிக்கை வைத்திருப்பது இனியும் நல்லதல்ல என்று அறிவுரைக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் விரைவில் குணமாகக்கூடியது அல்ல என்பதற்கு உதாரணம், மார்கெட்டில் கிடைக்கும் ஏராளமான பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், அதுவும் வித விதமாக. ஆனால் ஒரு சில இயற்கை வழியில் கிடைக்கும் பொருட்களை வைத்தே, அந்த உயர் இரத்த அழுத்த நோயை குணப்படுத்த முடியும். அவை என்னவென்று இங்கே காணலாமா?


பூண்டு
இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.



கற்பூரவள்ளி
ஆய்வு அறிக்கையின்படி, கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.



முருங்கைக் காய்
முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.




நெல்லிக்காய்
நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.



முள்ளங்கி
இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.



எள்
சமீபத்திய ஆய்வின் படி நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.



ஆளி விதை
ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.



ஏலக்காய்
உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.



வெங்காயம்
வெங்காயத்தில் குவர்செட்டின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால், அவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் மற்றும் வாதத்திலிருந்து காப்பாற்றும்.


லவங்கப்பட்டை
லவங்கப்பட்டை இதய நோய்கள் தவிர சர்க்கரை நோயையும் தடுக்கும். ஓஹியோவிலுள்ள செயல்முறை உடல் நலம் அறிவியல் மையம் நடத்திய ஆய்வின்படி, 22 நபர்களில் 11 பேருக்கு தினமும் தண்ணீரில் லவங்கப்பட்டை பொடி 250 மி.கி. அளவில் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆறுதல் மருந்து மட்டுமே அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் லவங்கப்பட்டை கலந்த தண்ணீர் அருந்தியவர்களுக்கு 13 முதல் 23 விழுக்காடு வரை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு கூடியது. மேலும் உயர் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.

முடி உதிர்வது முழுவதுமாக தடுக்க

முடி உதிர்வது முழுவதுமாக தடுக்க ( தொகுத்தது )

1. முடி வளர : முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.

2. சொட்டைத் தலையில் முடி வளர : பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.

3. வழுக்கைத் தலையில் முடி வளர : கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும்.

4. முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம்.

5. முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.


முடி உதிர்வதை தடுக்க வேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.

தலையில் உள்ள சொட்டை மற்றும் வழுக்கை மறைய இரவில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து அந்தச்சாறை மேற்குறிப்பிட்ட இடங்களில் தடவினால் தலைமுடி வளர வாய்ப்பு உண்டு

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து நல்லா கலக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்தாலும் முடி நல்லா செழித்து வளரும். முடி கொட்டுவதும் நிற்கும்

 கூந்தல் பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் சில:
கூந்தல் உதிர்வு

தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்
அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

இளநரை நீங்க

(a)நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.
(b) நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
(C)சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.



பேன் தொல்லை நீங்க
வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.

செம்பட்டை மறைய
முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.
"பிடிரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம்மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

15. மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.

ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது.  முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு விடுவதால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது. எண்ணெய் வகைகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருப்பதால் முடிப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிக்குமார்.
தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷயமே. முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைபாடான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்றுவதால் முடி கொட்டுவது அதிகரிக்கலாம். தலையில் பொடுகு ஏற்பட்டாலும் முடி கொட்டும். தலையின் தோல் பகுதியில் காணப்படும் வறட்சியின் காரணமாக முடி கொட்டலாம்.

தலையின் தோல் படலத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிசுக்கினாலும் முடி கொட்டும். வியர்வை அதிகமாக சுரத்தல், தைராய்டு ஹார்மோன் குறைபாடு, பரம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம். ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம். ரத்த சோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச் னை இருக்கும். தலைப்பகுதியில் சொரியாசிஸ் பிரச்னை இருந்தாலும் முடி கொட்டும். ஷாம்பு மற்றும் எண் ணெய்யை மாற்றுவதால் மட்டும் முடி கொட்டும் பிரச்னையை தீர்க்க முடியாது. முடிகொட்டுவதற்கு முன் சில அறிகுறிகள் ஏற்படும். முடி வலுவிழந்து மெல்லியதாக மாறும். முடியில் மெலனின் குறைபாட்டினால் முடியின் கருப்பு வண்ணம் குறைந்து சிவப்பு வண்ணம் அதிகரிக்கும். எப் போதும் வறட்சியாக காணப் படும். நுனிப்பகுதி வெடிக்கும்.

இதன் அடுத்த கட்டமாக முடி கொட்ட ஆரம் பிக்கும். ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வது மற்றும் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் முடி கொட்டும் பிரச்னையைத் தவிர்க்கலாம். பாதுகாப்பு முறை: ஊட்டச்சத்து மற்றும் இரும்புச் சத்து உள்ள உணவுகள் தினமும் இருக்கும்படி பார்த்து கொள்ளவும். அதேபோல் முடியை அடிக்கடி அலசி அதில் அழுக்கு சேருவதை தடுக்கவும். முடிக்கு எண்ணெய் வைக்காமல் வறண்ட நிலையில் வைத்திருந்தால் முடியின் நுனிப்பகுதி வெடித்து முடி வலுவிழந்து உதிர்ந்து விட வாய்ப்புள்ளது. எனவே முடிக்கு தகுந்த ஷாம்புவை டாக்டரின் ஆலோசனைப்படி பின்பற்றலாம். பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு தொடங் கிய பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முடி கொட்டும் பிரச்னை சிலருக்கு ஏற்படுகிறது. எனவே மாதவிலக்கு குறைபாடு இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும்.  வாரத்துக்கு மூன்று முறை யாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஷாம்புவை அடிக் கடி மாற்றக்கூடாது. மேலும் அரப்பு மற்றும் பூந்திக்காயை பொடி செய்தும் தலைக்கு குளிக்க பயன்படுத்தலாம். முடியை மென்மை யாக கையாள வேண்டும்.  இயற்கை யான காற்றில் முடியை உலர்த்துவது நல்லது.
முடி உதிர்தல், உடைதல் இரண்டு பிரச்னைக்குமே தோல் மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது. பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் அதற்கான ஷாம்பு மற்றும் சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் விடுபடலாம். மேலும் சொரியாசிஸ் உள்ளவர்களும் அதற்கான சிகிச்சை எடுப்பது அவசியம். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் பிரச்னை இருப்பின் அதையும் சரி செய்யவும். முக்கியமாக டென்ஷனைக் குறைக்க வேண்டும். தலைக்கு ஆயில் மசாஜ் போன்ற கூடுதல் கவனிப்பும் வேண்டும்.-ஸ்ரீதேவி

குடைமிளகாய் சட்னி: குடைமிளகாய் 4 எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொடித்த நிலக் கடலை, துருவிய தேங்காய் 4 டீஸ்பூன், இரண்டு டீஸ்பூன் புளி விழுது, சீரகம் சேர்த்து அரைக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு குடைமிளகாயை நன்றாக வதக்கவும். அத்துடன் கரம் மசாலாத்தூள் 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த கலவை சேர்த்து வதக்கி கடைசியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். இந்த சட்னியில் தேவையான அளவு இரும்புச் சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

ரெசிபி

கொத்தமல்லி சாதம்:
வேகவைத்த சாதம் 2 கப், துருவிய கேரட் அரை கப், நறுக்கிய பீன்ஸ் அரை கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கொத் தமல்லி ஒரு கப் எடுக்கவும். சீரகம், கடலைப்பருப்பு, மிளகு தலா ஒரு டீ ஸ்பூன், பட்டை கிராம்பு சிறிதளவு எடுத்து இவற்றை எண்ணெயில் வதக்கி பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து காய் வகைகளை வதக்கி அரைத்த பொடி, உப்பு சேர்க்கவும். இத்துடன் சாதம் சேர்த்துக் கிளறி கடைசியில் கொத்தமல்லி சேர்த்து மிக்ஸ் செய்தால் போதும். இதில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

ராகி பக்கோடா: ராகி மாவு தேவையான அளவு எடுத்து பொடியாக நறுக்கிய வெங் காயம் ஒரு கப், பொட் டுக் கட லை, இர ண்டு ஸ் பூன் வெண்ணெய், நறுக் கிய கீரை ஒரு கப், உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு பக்கோடா பதத்துக்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் பக்கோடாவாகப் போட்டு எடுக்கவும். இதில் இரும்புச் சத்து, நார்சத்து மற்றும் மைக்ரோ வைட்டமின் சத்துகள் உள்ளன.

டயட்

நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமின் குறைபாடு, பரம்பரைக் காரணங்கள், மரபணு மாற்றம், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் உள்ள ரசாயனம், கேன்சர், சர்க்கரை நோய்க்கு எடுத் துக் கொள்ளும் சிகிச்சை முறைகள், ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம், சுற்றுச் சூழல் மாசு, வயது முதிர்வு உள் ளிட்ட பல காரணங்களால் முடி கொட்டும் பிரச் னை உள்ளது. முடிப்பிரச்னை அலோப்சியா என அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு 100 முடிகள் வரை உதிர்வது சாதாரண விஷயம். தைராய்டு ஹார்மோன் குறைபாட்டினாலும் முடி உதிரும். காப்பர், ஜிங்க், அயோடின், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தால் முடி உதிரும் பிரச்னை அதிகரிக்கும். சிவப்பு, மஞ்சள் வண்ணக் காய்கள் மற்றும் பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு கீரை கட்டாயம் சேர்க்கவும். கேரட், எலுமிச்சை, தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி கள் சேர்க்கவும். அன்னாசி, பப்பாளி, ஆரஞ்சு சேர்க்கலாம். ஆட்டு ஈரல், மீன் மற்றும் மீன் எண்ணெய், பால், முட்டை கட்டாயம் சேர்க்கவும். சோயா மற்றும் சோயா பொருட்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பாலாடைக்கட்டி, இளநீர், மோர், பனீர், நிறைய சேர்த்துக் கொள்ளலாம். காளான் சாப்பிடுவதன் மூலம் சத்துக் குறைபாட்டை தவிர்க்கலாம். பீன்ஸ், பாலாக்கீரை மற்றும் மொச்சை வகைகளையும் சேர்க்கலாம். தினமும் 12 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மசாஜ், ஆயில் பாத், யோகா மூலம் சத்தான உணவு உட்கொண்டு முடி கொட்டும் பிரச்னையை தடுக்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

*  முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.
*  முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
*  மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.
*  மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.
*  மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவள  ரும்.
*  பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத்    தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்

இன்று பெண்களைப் போல ஆண்களும் தங்கள் தலைமுடியைக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்களுக்கும், பெண்களும் உதவும், முடிகாக்கும் குறிப்புகள் இவை…
* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து, காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி, தலையில் தேய்த்துக் குளித்துவர முடி உதிர்வது நிற்கும்.
* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
* முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வளர கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக்கும்.
* இளநரை கருப்பாக, நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.
* முடி கருப்பாக, ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்திப் பூ இடித்துத் தூள் செய்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர வேண்டும்.
* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவந்தால் முடி கருமையாகும்.
* தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கிராம் அளவை, 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
* செம்பட்டை முடி நிறம் மாற, மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குத் தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
* நரை போக்க தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும்.
* முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
* கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
* முடிகொட்டிய இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்துத் தடவிவர வேண்டும்.
* புழுவெட்டு மறைய, நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும், புழுவெட்டும் மறையும்.

பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் :


வரக்கொத்தமல்லி –அரை கிலோ ,வெந்தயம் —கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

இட்லி பூவின் பயன்கள்

இட்லி பூ என அழைக்கப்படும் வெட்சி பூவின் மருத்துவ பலன்கள்
வெட்சி பூ பெருவாரியான மக்களால் இட்லி பூ எனவும் அழைக்கப்படுகிறது. குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது. அழகுக்காக வளர்க்கப்படும் வெட்சி செடியின் பூ, இலைகள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது.

 
சளியை கரைத்து வெளியேற்றும். ரத்தம் கலந்து சளி வெளியேறும் பிரச்னையை தீர்க்க கூடியது. வெட்சி செடியின் இலைகளை அரைத்து போடும்போது தோல்நோய்கள் குணமாகும். கொப்புளங்கள், அரிப்பு, தடிப்பை சரிசெய்யும். அடிபட்ட இடத்தில் தசை  நசுங்கி ரத்தநாளங்கள் சீர்கெட்டு போகும் நிலையில் மேல்பற்றாக போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும்.  வயிற்றுப்போக்கை நிறுத்த கூடியது. 
 
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சி பூவை  சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை வடிகட்டி பூசிவர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை போக்கி முடிக்கு வளத்தை கொடுக்கிறது.
 
வெட்சி பூ உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. உடல் அசதி, கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை  இருக்கும் போது வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை என இருவேளைகள் குடிக்க வேண்டும்.
 
பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.

இயற்கை விவசாயத்தில் சாதித்த பெண்.


கிராமத்துல இருந்து (Italy)இயற்கை விவசாய மாநாட்டில் பங்குபெற்ற பெண்.
நம்மாழ்வார் அறிவுரை படி சாதித்துள்ளார்.

Sunday, 11 March 2018

அகத்திகீரை பற்றி ஹீலர் பாஸ்கர் சொல்வதை கேளுங்கள்


முடகற்றான் கீரையின் பயன்கள்


மாடு வளர்ப்பில் அசத்தும் பெண்


விவசாயிகள் அறுவடை செய்த நெல்யை தாங்கள விற்க வேண்டும்

விவசாயத்தை விட முடியாது
விவசாயிகள் தாங்களே அவர்கள் அருவடை செய்த நெல்யை விர்க்கவண்டும்.

ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் விவசாயம்

ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்யும் விவசாயி.குறைந்து அளவு தண்ணீர், நிலம் போதும் கால்நடைக்கான தீவனத்தை தயாரிக்கலாம்.

ஆடு,மாடு மேய்ப்பது பற்றி சீமான் அறிவுரை

பால்,தயிர் இது எல்லாம் வேனும் ஆனா ஆடு,மாடு மேய்க்கரது அசிங்கமா, சீமான் சொல்லும் கருத்தை கேளுங்கள்.
ஆடு ,மாடு மேய்ப்பது அரசாங்க வேலை ஆகும்.

விதை பந்து


இயற்கை உரம் ஆட்டு எரு

நம் கண் முன்னால் இருக்கும் இயற்கை உரம்...!
மகசூலை அதிகரிக்க ஆட்டு எரு...!

 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்கும் சுழ்நிலையில் நாம் உள்ளோம். உணவு உற்பத்தியை அதிகரிக்க இயற்கை தந்த ஓர் வரப்பிரசாதம் தான் ஆட்டு எரு. இவ்வகை இயற்கை உரத்தில், செயற்கை உரத்தை காட்டிலும் அதிக சத்துக்கள் உள்ளன. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

எரு அளவு :

ஆட்டு எருவில் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து உள்ளது. ஒரு ஆடு ஆண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவை அளிக்கிறது. ஒரு ஹெக்டர் நிலத்தை எல்லா சத்துக்களையும் கொண்டு வளப்படுத்த 240 ஆடுகளின் எரு போதுமானது. 

ஆட்டு எரு மண் வளத்தை பெருக்குகிறது. ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப்பொருட்களின் அளவு அதிகரித்து ஈரப்பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாக இருக்கும். ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவானது, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு கொடுக்கப்படும் தீவனத்தை பொறுத்தே அமைகின்றன.

சத்துக்கள் :

ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான வேலி மசால், சுபா புல், குதிரை மசால், முயல் மசால், தட்டைப்பயறு போன்றவற்றை உணவாக கொடுத்தால், அதன் எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு நுண்ணு}ட்டச்சத்துக்களும், தாது உப்புகளும் அதிகமாக இருக்கும். 

ஆட்டு எருவில் 50 முதல் 75 சதவீதம் தண்ணீரும், 3 சதவீதம் தழைச்சத்தும், 0.5 சதவீதம் மணிச்சத்தும், 1.8 சதவீதம் சாம்பல் சத்தும் இருக்கின்றன. மேலும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான போரான், மக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் ஆகிய சத்துக்களும் அதிக அளவில் உள்ளன.

ஆழ்கூளம் :

விவசாயத்திற்கு அதிக அளவு ஆட்டு எரு தேவைப்படுமானால், அவற்றை ஆழ்கூளம் முறையில் தயார் செய்யலாம். அதற்கு முதலில் ஆட்டு கொட்டகையின் தரைப்பகுதியில் நிலக்கடலை தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு அகியவற்றை அரை அடி உயரத்தில் ஒரு ஆட்டிற்கு 8 கிலோ என்ற அளவில் பரப்பி விட வேண்டும்.

இவ்வாறு பரப்பி விடுவாதால் ஆட்டு புழுக்கையானது இந்த ஆழ்கூளத்தில் படிந்து விடும். சிறுநீர் ஆழ் கூளத்தினால் உறிஞ்சப்பட்டு, தழைச்சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ்கூளத்தில் உள்ள ஈரத்தன்மையை பொறுத்து 3 மாதங்களில் இருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டு எருவை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

லாபம் :

ஆழ்கூளம் முறையில் 20 ஆடுகளில் இருந்து ஒரு ஆண்டீற்கு 5 டன் தரமான எரு கிடைக்கும். இதில் யு+ரியாவில் உள்ளதைப்போல தழைச்சத்தும், சு+ப்பர் பாஸ்பேட்டில் உள்ளதைப்போல மணிச்சத்தும், பொட்டாஷ்சில் உள்ளதைப் போல சாம்பல் சத்தும் இதில் கிடைக்கும். ஆழ்கூளம் முறையில் பெறப்படும் ஆட்டு எருவை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும் நெல், தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை மற்றும் அனைத்து விதமான பயிர்களுக்கும் ஆட்டு எருவை பயன்படுத்தினால் அதிக மகசு+ல் கிடைக்கும், கூடுதல் லாபமும் பெறலாம்.

நுனி வீட்டுக்கு

நடு மாட்டுக்கு

அடி மண்னுக்கு

...கோ.நம்மாழ்வார்...

Saturday, 10 March 2018

சர்க்கரை நோய்க்கு வீட்டு வைத்தியம்



சர்க்கரை_நோய்


இன்று பலரையும் தாக்கும் பொது நோயாக சர்க்கரை நோய் உருவேடுத்துக் கொண்டுள்ளது.

டீக்கடையில் கூட நடுத்தர வயதினரை கண்டால், டீக்கடைக்காரர் சர்க்கரை கம்மியாக போடவேண்டுமா? என்ற கேள்வியை கேட்ட பிறகே டீ போடுகின்றார்.

அதற்கு காரணம் நடுத்தர வயதினர் அதிகமாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதே.

ஏன் பிறந்த குழந்தைக்கே இந்நோய் உள்ளது.

இது ஒரு பரம்பரை நோய் என்று தவறாக மக்கள் மத்தியில் பரப்படுகின்றது.

நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தாத்தா, பாட்டி சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்களா? அல்லது உங்கள் பெற்றோரை கேளுங்கள் அவர்களுடைய தாத்தா, பாட்டி இந்நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாருகளா? என்று இல்லை ஒரே பதில் மட்டுமே நமக்கு கிடைக்கப்பெறும்.

அப்படி இருந்தும் ஏன் இப்படி பரப்புகின்றார்கள் என்றால். இன்றைக்கு நாம், நாளை நம் பிள்ளைகள், அதன்பிறகு பேரப்பிள்ளைகள்.

பேரப்பிள்ளை காலங்களில் இது பரம்பரை நோய் என்றே நம்பப்படும்.

சர்க்கரை என்பது நோயா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.

சித்த மருத்துவத்தில் 24 வகையான சர்க்கரை நோய் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதனை சித்த மருத்துவத்தில் மதுமேகம் என்று அழைக்கின்றனர்.

மது என்றால் இனிப்பு என்று அர்த்தம்.

சர்க்கரை நோய் இன்று மரபு பழக்கவழக்கங்கள் மாறுப்பாட்டினால் ஏற்படுகின்றது. அது மட்டுமில்லாமல் கார்ப்ரேட் நிறுவனங்களும் செயற்கையான முறையில் இந்த நோயை உறுவாக்கின்றனர். அதைப்பற்றி முழுமையாக அடுத்ததோர் பதிவில் விரிவாகவும் தெளிவாகவும் கூறுகின்றேன்.

சர்க்கரை_நோய்க்கு_வீட்டு_வைத்தியம்

இரண்டு டம்ளர் தண்ணீரில் 5 நித்யகல்யாணி மலர் இதழ்களை போட்டு அத்துடன் சிறிது மிளகு தூளை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து, அறை டம்ளராக தண்ணீர் சுண்டும் வரை கொதிக்கவைத்து. அதனை காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் அருந்தி வர சர்க்கரை நோய் குறைந்து, கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.


குறிப்பு: உணவிற்கு பிறகு நாம் துவர்ப்பு சுவையை சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்போது தான் உடல் சர்க்கரை நோய் இல்லாமல் இருக்கும். அதற்காகதான் நம் முன்னோர்கள் வெற்றிலை சீவல் பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். இன்று நாகரீகம் என்ற பெயரில் அந்த பழக்கவழக்கம் கைவிடப்பட்டுள்ளதினால் ஏற்பட்ட விளைவுதான் இந்த நோய்க்கு காரணம். சிறிது கொட்டை பாக்கை உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. நித்யகல்யாணி மலர் படம் கொடுக்கப்பட்டுள்ளது.